Thursday, August 25, 2016


இரவு

--------


இருளில் மறைந்திருந்த திருடர்கள்
ஓசையின்றி
கரும்புகை  என  மெல்ல நகர்ந்து
வாசலில் படுத்துறங்கும்
கறுப்பு நாயின் வாலை மிதித்து விடாமல்
வீட்டுக்குள் நுழைவதை
கண்கள் ஒளிர 
பார்த்துக் கொண்டிருந்தது
மதில் மேல் அமர்ந்திருந்த 
கருப்புப் பூனை.
----


- தென்பாண்டியன்


ஆனந்த விகடன் 25.08.2013 ல்
வெளியானது

No comments:

Post a Comment