Tuesday, August 9, 2016

அரூப நடனம்


கொடியில் உலரும்
குழந்தைகளின் ஆடைகளை
அணிந்து கொண்டு
நடனமிடுகிறது காற்று


காற்றின்  அரூப உடல்  மொழியில்  
சுழலும் ஆடை  
குழந்தையாகி குதுாகலிக்கிறது


பெண் குழந்தைகளின்
பிரில் வைத்த பாவாடைகள்
காற்றின் உடலுக்கு
கச்சிதமாய் பொருந்திப் போக

நிசப்தமாய் நிழ்ந்து கொண்டே இருக்கிறது அதன் நடனம்

.....
- தென்பாண்டியன்
( குமுதம் திராநதி பிரசுரமானது )

No comments:

Post a Comment