Tuesday, August 2, 2016













இறகு பேனா


கடவுளின்
மேசையின் மீது இருக்கும்
மைப்புட்டியில் உள்ள இறகுப்பேனா
எந்தப்பறவையுனுடையது என
தெரியவில்லை.


எவர் கண்களுக்கும் புலப்படாத
அரூப லிபியில் எழுதும் அவ்விறகில்
இவ்வுலகின் எல்லா நிறங்களும்
தென்படுகின்றன.

கடவுளை சந்திக்க நேர்ந்தால்
அப்பறவையின் பெயர் குறித்து
வினவவேண்டும்

அப்பெயர் அழிந்து வரும்
அரிய பறவைகள் பட்டியலில்
இருக்கக்  கூடும்.

-  தென்பாண்டியன்

No comments:

Post a Comment