Friday, July 29, 2016




உறக்கமிழந்தவன் இரவு
––––––––––––––––––––
நள்ளிரவில் தட்டப்படும்
அல்லது சாத்தப்படும்
கதவின் சப்தம்
ஒரு லயத்தோடு ஒலிக்கிறது.

பனியுறைந்த இருள் மீது
ஒளிரும் திங்கள்
அவ்விரவை சாம்பல் நிறமாய்
மாற்றுகிறது.

நிசப்தம் கலையாத சன்ன ஒலியுடன்
இரவுப் பறவைகள்
விரைகின்றன.

உறக்கமிழந்து தவிப்பவனின்
கூதல் மிகுந்த துயர கணங்கள்
விடியலற்று அலைகிறது.

தனிமையை
மேலும் தனிமையாக்கி
பெய்கிறது மழை.

ஒரு மலரை போல்
மணமுடையதாகவும்
ஒரு பறவையை போல்
விடுதலையுடையதாகவும்
இருப்பதில்லை வாழ்க்கை.
நீங்காத சாபத்தை போலவும்
பீதியூட்டும் மரணத்தை போலவும்
இருக்கிறது
………
(‘குமுதம் தீராநதி’ 2015 அக்டோபர் இதழில்
வெளிவந்துள்ள என் கவிதை...)