Monday, August 1, 2016

பறவைகளை வழி நடத்துபவன்
---------------------------------------------------------
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடித்ததும்
அது பறந்து விட்டது.

மீண்டும் ஒரு பறவையை
வரையத் துவங்கினேன் 
வரைந்து முடித்ததும்
அதுவும் பறந்து விட்டது.

நான் வரைந்து
கொண்டேயிருந்தேன்
அவைகள் பறந்து
கொண்டேயிருந்தன....

இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைளும் வந்து
அமர்ந்து கொண்டன. !

………

- தென்பாண்டியன் .

No comments:

Post a Comment