Tuesday, March 14, 2017









ஓர் இறகின் உள் உலகம்


பறவையின் உதிர்ந்த இறகொன்றை எடுத்து
காது குடைந்த போது
சிறகுள்ள தேவதை ஒருத்தி
என்னை தழுவிக்கொண்டு பறந்தாள்
பீதியூட்டும் அந்தரவெளியில்
வான் நீலம் கரைய பெரும் மழை பெய்தது
விரையும் சிறகசைவில் பட்டுத்தெறிக்கும்
நீர் துளிகள் என்னை குளிரூட்ட 
அவள் தன் மார்புச்சூட்டை பெருக்கி
வெப்பமூட்டினாள்
விரிந்த பேராகாயத்தில்
முடிவற்று நிகழும் பயணத்தின்ணுாடே
இயலாமையில் சினங்கொண்ட
குறி சிறுத்த தேவகுமாரர்களால்
சபிக்கப்பட்ட தேவதைகளின்
கதையொன்றை சொன்னாள்.

– தென்பாண்டியன்

No comments:

Post a Comment