Tuesday, August 2, 2016


சருகுகளின் சப்தம்



இலையுதிர்ந்த மரக்கிளையில் 
தனித்து அமர்ந்திருக்கும் 
பறவையின் மௌனம்
இப்பிரபஞ்சத்தை அச்சுறுத்துகிறது.

இயற்கை சமன்குலைந்த 
இவ்வுலகில்
காலத்தின் நுண்ணடுக்குகளில்
அரூபமாய் மறைந்திருக்கும் 
பேரழிவு ரகசியங்களை 
பறவைகள் அறிந்திருக்க கூடும்.

வேர் நுனிகளுக்கு எட்டாத ஆழத்தில்  
உள்வாங்கி விட்ட
நிலத்தடி நீரை நோக்கி 
உலர்ந்த வேர்களை நீட்டும்
தாகித்த மரங்களில் இருந்து
உதிரும் சருகுகளின் சப்தத்தில் 
வறட்சியின் குரூரம் ஒலிக்கிறது.

சற்றும் எதிர் பாரத கணத்தில்
ஈரவாடை  வீசும் திசையை நோக்கி 
பறந்து செல்கிறது அப்பறவை. 


- தென்பாண்டியன்,

No comments:

Post a Comment