Tuesday, August 2, 2016







தானியவயல்


பெரும் தருக்கள் அசையும்
அடர் வனத்திலிருந்து
பறந்து வரும் பறவைகள்
என் தானிய வயல்களில்
அமர்கின்றன.

யாதொரு எதிர்வினையும்
நிகழ்த்தவியலாது விரைப்பாக நிற்கிறது
காவல் பொம்மை.

கையில் கவண்கல் இருந்தும்
வீச மனமின்றி
பரண்மேல் நின்று ரசிக்கிறேன்
அவை இரையுண்ணும் பேரழகை.

- தென்பாண்டியன்

No comments:

Post a Comment