Monday, August 1, 2016

துயரகணம்
-------------------

மனம் கசந்த பொழுதுகளில்
பெறப்படும் எவ்வித முத்தமும்
தித்திப்பதில்லை.

நிறமிழந்த துயரத்தை
கோடுகளும் புள்ளிகளுமின்றி
சித்திரமாக்குகையில்
பிசாசுகள் கண் விழிக்கின்றன


ஆலகாலம் தேங்கிய ஆழிப்பேராழத்தில்
மூழ்கி கிடக்கையில்
கிளிஞ்சலென கரையொதிக்கி
போகிறது அப்பேரலை.

தென்பாண்டியன்
காலச்சுவடு இதழில் வெளியான கவிதை 

No comments:

Post a Comment