Wednesday, August 3, 2016


குளம்

தவளைகள் மீன்கள் 
தண்ணீர் பாம்புகள்  
இன்னும் பிற நீர் வாழ் 
உயிரினங்கள் ஜீவித்திருக்கும் 
குளத்தில் 
பாசிகளும் நீர் தாவரங்களும் 
படர்ந்திருக்கின்றன...!


எதை வீசி எரிந்தாலும் 
உள்ளே இழுத்துக்கொண்டு 
நேர்த்தியான நீர் வளையங்களை 
காட்சிப்படுத்தும் குளம் 
நெகிழி பொருட்களை மட்டும் 
வெளியே தள்ளி மிதக்கவிடுகிறது.                                                          

– தென்பாண்டியன்
/ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை /
















No comments:

Post a Comment